என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைது செய்ய தடை"

    • ஐ.டி. ஊழியர் கடத்தல் தொடர்பாக நடிகை லட்சுமி மேனனின் நண்பர்கள் இருவர் கைது.
    • லட்சுமி மேனன் தரப்பில் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

    கேரள மாநிலம் கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள ஒரு பாருக்கு கடந்த 24-ந்தேதி இரவு நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சென்றிருந்தனர். அப்போது அவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாரில் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அவர்கள் நள்ளிரவு நேரத்தில் பாரில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றனர். அப்போது நடிகை லட்சுமி மேனன் தரப்பினர், தங்களிடம் தகராறு செய்த எதிர் தரப்பை சேர்ந்த ஐ.டி. ஊழியரான ஆலுவாவை சேர்ந்த அலியார் ஷா சலீம் என்பவரை தங்களது காரில் கடத்தி தாக்கியதாக தெரிகிறது.

    பின்பு அவரை ஆலுவா-பரவூர் சந்திப்பில் இறக்கிவிட்டு சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து ஐ.டி. ஊழியர் எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தன்னை காரில் கடத்தி தாக்கியபோது லட்சுமிமேனன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் இருந்ததாக அலியார் ஷா சலீம் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதைதொடர்ந்து, ஐ.டி. ஊழியர் கடத்தல் தொடர்பாக நடிகை லட்சுமி மேனனின் ஆண் நண்பர்கள் மிதுன், அனீஷ் ஆகிய 2 பேரை எர்ணாகுளம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் ஐ.டி.ஊழியர் காரில் கடத்தி தாக்கப்பட்டபோது நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கடத்தல் சம்பவம் தொடர்பாக நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. இதனால் நடிகை லட்சுமி மேனனை எர்ணாகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், லட்சுமி மேனன் தரப்பில் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதைதொடர்ந்து, ஐ.டி.ஊழியரை தாக்கிய புகாரில் நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய செப்டம்பர் 17ம் தேதி வரை தடை விதித்து கோரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்தை கைதுசெய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #CBI #NaliniChidambaram
    சென்னை:

    கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரூ. 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.26 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி உள்ளன.

    இதற்கிடையே, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    இந்நிலையில், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் நளினி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் நளினி சிதம்பரத்தை கைதுசெய்ய தடை விதித்துள்ளது. #CBI #NaliniChidambaram
    ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
    புதுடெல்லி:

    ஏர்செல்-மேக்சிஸ் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



    இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் சிலரை வழக்கில் சேர்ப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டியிருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சிபிஐக்கு ஜனவரி 11ம்தேதி வரை கால அவகாசம் வழங்கிய தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, அதுவரை ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார். #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
    ×